Saturday, November 21, 2015

26 -தருமரின் நற்பண்புகள்


ஒருவன் தோல்வியோ, அவமானமோ அடைய வேண்டும் என்று விதியிருந்தால் அவர்களின் அறிவு மழுங்கிப் போய்விடும்.அறிவு பழுதுப்பட்ட நிலையில் அந்த மனிதன் கீழ்த்தரமான செயல்களைப் புரியத் தொடங்கி விடுவான்

அறிவு மயங்கி அதனால் வீழ்ச்சியடையும் நேரம் வந்து விட்டால், ஒருவனுக்கு அவன் செய்யும் அநியாயமெல்லாம், நியாயமாகத் தெரியும்.தனது அநியாயச் செயலை நியாயமானது என மனதில் பதிந்துவிடச் செய்வான்

பரதகுலத்தில் பிறந்த திருதராஷ்டிரரே! உமது புதல்வர்கள் பாண்டவர்களிடம் பகைமை உணர்வு கொண்டுள்ளதால் அவர்களிடம் புத்தித் தெளிவு இல்லை.அவர்கள் எத்தகையவர்கள் என நீங்களும் அறியவில்லை

தருமர், மூவுலகும் ஆளத்தகுதியுடையவர். அதற்கான அனைத்து அரச லட்சணங்களும் உடையவர்.அப்படியிருந்தும் உங்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்.ஆகவே அவரை அமைச்சராக்கி விடுங்கள்

தருமரிடம், ஆற்றலும்,விவேகமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.நற்பண்புகள், உலக நன்மைக்கான அனைத்து நடவடிக்கைகள் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார்.ஆகவே, உங்கள் மகன்களைவிட தருமரே அரசப் பதவிக்கு அதிக உரிமையுள்ள வாரிசு ஆவார்..

நல்ல ,மனிதர்களில் முதல்வரானவர் தருமர்,அவருக்கு விளைவிக்கப்பட்ட கெடுதல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு வருகிறார்.அவர், கனிவானவர்.மென்மையானவர்.உங்களிடம் மரியாதை உடையவர்.இதுவே அவர் பொறுமைக்குக் காரணம்

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

No comments:

Post a Comment