Saturday, December 12, 2015

27-விதுரர் சொன்ன கதை



விதுரர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவரிடம், "விதுரா! நீ அறிஞன்.இதுவரை எனக்குச் சொன்னதைப் போன்ற அறிவுரைகளை மேலும் சொல்வாயாக.உன் சொற்கள் நற்பண்பை வலியுறுத்துகின்றன.உலக நன்மைக்கான பல விஷயங்களைக் கூறினாய்.அவை உண்மை.ஆனாலும், என் மனம் மேலும் கேட்க விழைகிறது" என்றார்.

விதுரர் கூறலானார்...

புனித நதிகளீல் நீராடினால் நமக்கு என்ன புண்ணியம் கிடைக்குமோ அதற்கு சமமான புண்ணியம், எல்லா உயிரினங்களையும் சமமாக பார்ப்பதிலும் கிடைக்கும்.ஆகவே சம நோக்கு வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரையும் சமமாக உம் புதல்வராக நினையுங்கள்.இதனால் உங்கள் புகழ் ஓங்கும்.சமநோக்கு என்ற புண்ணியம், இறந்தபின் சுவர்க்க வாழ்வை அளிக்கும்.எவ்வளவு காலம் வரை ஒரு மனிதரின் புகழும், புண்ணியமும் போற்றப்படுகின்றனவோ..அவ்வளவு காலம் சுவர்க்கத்திலும் அவனுக்குக் கௌரவம் கிடைக்கும்.இதை விளக்க பழைய கதை ஒன்றைக் கூறுகிறேன்....

கேசினி என்ற ராஜகன்னிகையால் தூண்டப்பட்டு பிரகலாதன் மகனான விரோசனன், அங்கிரச முனிவரின் புதல்வன் சுதன்வனுடன் விவாதம் செய்து பேசிய கதை இது.

கேசினி அழகியாவாள்.அவள் தலைசிறந்த இளைஞன் ஒருவனைக் கணவனாக அடைய விரும்பினாள்.இதற்கான சுயம்வரம் நடத்த முடிவெடுத்தாள்.அவளை மனைவியாக டையும் நோக்கில் விரோசனன் சுயம்வரத்திற்கு வந்தான்.அவன் தைத்திய இனத்தைச் சேர்ந்தவன்.கேசினி அவனிடம் கேட்டாள்.(காசியமுனிவர் தொடங்கியது தைத்திய இனம்.மனைவி திதி.இவர்களது மக்ன்தான் இரண்யன்.இரண்யனின் மகன் பிரகலாதன்.பிரகலாதனின் மகன் விரோசனன்)

"விரோசனரே! அந்தணர்கள் உயர்ந்தவர்களா? தைத்தியர்கள் உயர்ந்தவர்களா? சுதன்வன் ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை?"

இதற்கு விரோசனன், "கேசினி...பிரஜாபதியின் வம்சமான நாங்கள் அந்தணர்களைவிட உயர்ந்தவர்கள்.அதுமட்டுமல்ல....எல்லாரையும்விட நாங்கள் உயர்ந்தவர்கள்.இந்த உலகு எங்களுடையது.தேவர்கள், அந்தணர்கள் யாரும் எங்களுடன் ஒப்பிடத் தகுந்தவர் அல்ல"

கேசினி - விரோசனரே! சுதன்வன் விடியற்காலம் வரக்கூடும்.நாம் காத்திருப்போம்.உங்கள் இருவரையும் கண்டு ஒப்பிட விரும்புகிறேன்

 அன்று இரவு கழிந்தது.மறுநாள் சூரியன் உதிக்கும்போது சுதன்வன் சுயம்வர மண்டபத்திற்கு வந்தான்.விரோசனன், கேசினி இருந்த இடத்தை அடைந்தான்.

சுதன்வனைப் பார்த்ததும் கேசினி எழுந்து வரவேற்று இருக்கை அளித்தாள்.பாதபூஜை செய்ய தண்ணீர் எடுத்து வந்தாள்.இதர பூஜைக்கான பொருட்களையும் கொணர்ந்தாள்.

சுதன்வன், விரோசனனைப் பார்த்து, "பிரகலாதனின் மகனான் நீ தங்க இருக்கையில் அமர்.நான் அந்தணன்.எனக்கு சாதா இருக்கைப் போதும்.அந்தத் தங்க இருக்கையை ஒருமுறை தொடுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.நான் உனக்கு நெருக்கமானவன்.ஆயினிம், சரி சமமாக அமர்வது பொருந்தாது" என்றான்.

அதற்கு விரோசனனும், "ஆம்.எனக்கு சமமாக அமர தகுதியற்றவன் நீ.மரப்பலகை, புல், மான் அல்லது புலித்தோல் ஆகியவையே உனக்குச் சரி" என்றான்.அதற்கு சுதன்வன் "ஆம்.நீ சொல்வது சாஸ்திரப்படி சரி.தந்தையும், மகனும் சமமாக உட்காரலாம்.இரு அந்தணர்கள், இரு சத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு நான்காம் வருணத்தார் சமமாக உட்காரலாம்.ஆனால், வெவ்வேறான இருவர் சமமாக அமரக் கூடாது. உன் தந்தை என்னை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி உபசரிப்பார்.தாழ்ந்த இருக்கையைப் போட்டுதான் தான் அமர்வார்.நீ அரண்மனையில் ஆடம்பர சூழ்நிலையில் வளர்ந்தவன்.உனக்கு இதெல்லாம் தெரியாது" என்றான்.

விரோசனன் அதற்கு, "எங்களிடம் உள்ள தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள் ஆகிய அனைத்தையும் பணயமாக வைக்கிறேன்.ஆற்றல் மிக்க யாரேனையும் நம்மில் உயர்ந்தவர் யார் எனக் கேட்டுப் பார்ப்போம்' என்றான்

அதற்கு சுதன்வன், "உன்னிடமுள்ள ஆடு, மாடு, குதிரைகள், தங்கம் அனைத்தையும் நீயே வைத்துக் கொள்.நான் என் உயிரை பணயமாக வைக்கிறேன்" என்றான்.
அதற்கு, விரோசனனும், தன் உயிரையும் பணயம் வைக்க தயாராய் இருப்பதாய்க் கூறினான்.ஆனால், இது குறித்து தேவர்களையோ, மனிதர்களையோ அணுக தனக்கு விருப்பமில்லை என்றான்.

உடன் சுதன்வன் "நாம் உயிரை பணயமாக வைத்து விட்டதால் இருவரும் உன் த்ந்தை பிரகலாதரிடம் கேட்போம்' என்றான்.இருவரும் பிரகலாதரிடம் சென்றனர். .

இவர்கள் வருவதைப் பார்த்த பிரகலாதர், "இவர்கள் இருவரும் ஒற்றுமையாய் இருந்ததில்லை.இப்போதும் சீற்றத்துடன் வருவது போலத் தெரிகிறது.என்ன சேதியாய் இருக்கும்" என யோசிக்கலானார்.

பின் அவர் விரோசனனைப் பார்த்து, "இதுவரை நீங்கள் நட்புடன் பழகியதில்லை.இப்போது சுதன்வன் உனக்கு நண்பன் ஆகிவிட்டானா?" என்றார்.

அதற்கு விரோசனன், "தந்தையே! நாங்கள் எங்கள் உயிரை பணயமாக வைத்து ஒரு பந்தயத்தில் இறங்கியுள்ளோம்.நாங்கள் கேட்கப்போகும் கேள்விக்கு பொய் கலக்காது உண்மையைச் சொல்லுங்கள்" என்றான்.

பிரகலாதரோ , அதற்கு முன்னதாக தனக்கு ஒரு கடமை உள்ளதாகக் கூறி, "சுதன்வன் அந்தண அதிதி.மரியாதைக்குரியவர் ஆகவே அவரை.வரவேற்கத் தண்ணீரும், பானமும், தானம் அளிக்க ஒரு வெள்ளைப் பசுவும் தயாராக உள்ளது' என்றார்.

சுதன்வனோ, "பிரகலாதரே! நீங்கள் கூறிய சொற்களே போதும்.எங்கள் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொன்னால் போதும்" என்றான்.

"அந்தணர் உயர்ந்தவரா? விரோசனன் உயர்ந்தவனா? ' என்றான் சுதன்வன்

பிரகலாதர் சொன்னார், "உமது கேள்விக்கு சரியாக விடையளிக்கும் திறமை, தர்ம சாஸ்திரங்களில் கரை கண்டவர்களான கல்மாஷர்,கபிலர்,வியாசர், லோகிதர் ஆகியவரிடம் கூடக் கிடையாது.அந்தணர், சத்திரியரில் யார் உயர்ந்தவர் என்பது கத்தி முனையைவிட கூர்மையான கேள்வி.தர்மநெரி சம்பந்தப்பட்டது.அந்தணரே1 ஒருபுறம் என் ஒரே மகன்,இன்னொரு புறம் நீங்களே நேரில் வந்துள்ளீர்கள்.என்னைப் போன்ற ஒருத்தரால் உங்கள் பிரச்னைக்கு எப்படி பதில் அளிக்க முடியும்?" என்றார்.

சுதன்வனோ, "பரவாயில்லை.என் கேள்விக்கு நீங்களே பதில் கூறுங்கள்.ஆனால் அது உண்மையானதாய் இருக்க வேண்டும்.பொய்யான பதிலைச் சொன்னால் உங்கள் தலை வெடித்துவிடும்."என்றார்.

அப்போது, அங்கே..பரமஹம்சர் பிரிவைச் சேர்ந்த தெய்வீகமான ஒரு முனிவர், அதிதி வம்சத்தைச் சேர்ந்த ஒருவருடன் வந்தார்.

அவரிடம், பிரகலாதார், "முனிவரே! இந்த இருவரில் ஒருவர் என் மகன்.மற்றொருவர் எனக்குத் தெரிந்த அந்தணர்...இவர்களிடையே தகராறு ஒன்று உள்ளது.நான் நடுவராக இருக்க வேண்டியுள்ளது.உண்மையை எப்படி நிலைநாட்டுவது?' என்றார்.

No comments:

Post a Comment