Friday, August 28, 2015

5- விதுர நீதி -- உறங்கா நிலைப் படலம்


(இந்த அத்தியாயத்திலிருந்து விதுரநீதி ஆரம்பிக்கிறது.விதுரர் கூறியவை 605 சுலோகங்களாகும்.இவை 1210 வரிகள் ஆகும்)

திருதராஷ்டிரர் தன் அறையின் காவலாளியை அழைத்தார்.அவனிடம், "நான் விதுரரை சந்திக்க விழைகிறேன்! அவரை அழைத்து வருவாயாக1" என்றார்.

அந்த வாயிற்காவலனனும் விதுரரிடம் சென்று, :"ஐயா! மாமன்னர் தங்களை சந்திக்க விரும்புகிறார்." என்றான்..விதுரரும் மன்னரைச் சந்திக்கச் சென்றார்.ஆழ்ந்த சிந்தனையில் இருந்த திருதராஷ்டரரிடம், இரு கைகளையும் கூப்பியபடியே விதுரர், தான் வந்துள்ளதாகத் தெரிவித்தார்..(திருதராஷ்டிரர் பார்வை இழந்தவர் ஆதலால், தன் பெயரைக் கூறி வந்ததைத் தெரிவித்தார்.)

"விதுரரே! நல்வரவாகுக.சஞ்சயனைப் பாண்டவர்களிடம் தூது அனுப்பியிருந்தேன்.அவன் திரும்பி விட்டான்.ஆனாலும், நேரமாகிவிட்டபடியால், நாளை காலை சபையில் தருமரின் செய்தியை அறிவிக்கிறேன் என்று சொல்லி விட்டான். தருமர் சொல்லியுள்ள செய்தி என்னவாக இருக்கும்? என என்னால் தெரிந்து கொள்ள இயலவில்லை.இதை எண்ணி எண்ணியே எனக்கு உறக்கம் வரவில்லை. விதுரரே! நீர்தான் நம்மிடையே நன்கு அறிவு நூல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவன்.ஆகவே, உறக்கம் வராது அவதிப் படும் எனக்கு ஒரு நல்வழி சொல்வாயாக.சஞ்சயன், என்ன செய்தி கொண்டு வந்துள்ளானோ? என்றே சிந்தனையாக உள்ளது.உம்மால், தருமர் என்ன சொல்லியிருப்பார் என யூகித்து சொல்ல முடியுமா? தருமர் எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தருமா?" என்றார்.

அதற்கு விதுரர், அரசே, யார் யாருக்குத் தூக்கம் வராது தெரியுமா? பலசாலிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் பலமற்றவர்களும், தன் தொழிலுக்கு ஏற்ற கருவிகளை வைத்திராத தொழிலாளிகளுக்கும்,சொத்தை இழந்தவர்களுக்கும், காதலிப்பவர்கள் அல்லது காமுகர்களுக்கும், திருடர்கள் ஆகியோருக்கும் இரவில் சரியாகத் தூங்க முடியாது.

அரசே! நீங்கள் மேற்கண்ட எந்த வகைக்களுக்குள்ளும் அடங்குபவர் அல்லவே!பிறர் சொத்தை அடையும் பேராசை உங்களுக்குத் தெரியாதே!" என்றார்.

"அந்தப் பிரச்னைப் பற்றித்தான் உன் அறிவுரையைக் கேட்க விரும்புகிறேன்!உன் கருத்துகள் எப்போதுமே அறப்பண்புக்கு பொருந்தி வருபவை.ஆகவேதான், அரசர் குலத்தில் பிறந்த ஞானிகளில் நீ மட்டுமே அறிஞர்களாலும் போற்றப்படுகிறாய்" என்றார்.

அதற்கு விதுரர்,"அரசே1 நற்பண்புகள் நிறைந்த அரசன் மூவுலகங்களையு8ம் அரசாளும் மேன்மை பெறுவான்.அத்தகையப் பண்புகள் நிறைந்த தருமருக்கு ஆதரவு அளிக்காமல் நாடு கடத்திவிட்டீர்கள்".நீங்கள் நல்லவர், வல்லவர்.அறநெறி அறிந்தவரானாலும் தருமருக்கும், உங்களுக்கும் வித்தியாசம் உண்டு..பார்வை இல்லாததால் நீங்கள் அதிர்ஷ்டம் குறைந்தவர்.(திருதராஷ்டிரர் புறக்கண்கள் மட்டுமின்றி, அகக்கண்ணும்குருடானவர்,  என மறைமுகமாக உரைத்தார் விதுரர்)

தருமர்..மென்மையானவர்,கனிவானவர், அறவழியில் நடப்பவர், உண்மையானவர், உங்களுக்குக் குடும்பப் பெரியவர் என்ற முறையில் மதிப்புத் தருபவர்.தனக்கு இழைக்கப்பட்ட தீமைகளை எல்லாம் அவர் தன் நற்பண்புகள் காரணமாக சகித்து வருகிறார்.நீங்கள் அட்சிப் பொறுப்பை துரியோதனன், சகுனி,கர்ணன்,துச்சாதனன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.அதற்குப் பிறகுமா வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்?" என்றார்.(மேற்கண்டவர்கள் நாட்டை ஆளும் தகுதியற்றவர்களாவார்கள்)


No comments:

Post a Comment