Monday, September 14, 2015

10 - மூன்று வகையினர்



தங்களது பணிகளை நிறைவேற்ற ஒவ்வொருவரும் தாழ்ந்தது,நடுத்தரமானது.உத்தமமானது என மூன்று வகையான அணுகுமுறைகளில் ஒன்றை மேற்கொள்கின்றனர்

உத்தமர்,மத்திமர்,அதமர் என மனிதர்கள் மூவகையாக பிரிக்கப்படுகின்றனர்.இவர்கள் முறையே உத்தமமான, நடுத்தரமான, இழிவான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

மனைவி,அடிமை,மகன் இவர்கள் மூவரும் தங்கள் பெயரில் சொத்து அமையப் பெறாதவர்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அல்லது அன்பளிப்பு ஆகியவை அவர்கள் யாரைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குப் போய்ச் சேரும்(முறையே, கணவன்,முதலாளி,தந்தை)

பிறர் பொருளைத் திருடுதல், பிறர் மனைவியைக் கற்பழித்தல்,நண்பனை மோசம் செய்து கைவிடல் இவை மூன்றும் ஆபத்தானவை.இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அவை அவனை எலும்புருக்கி நோயாய் அரித்து அழிவிற்குக் காரணமாய் அமையும்

காமம், கோபம், பேராசை இவை நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன.இவை ஆத்மாவைக் களங்கப் படுத்தும்.ஆகவே அவற்றைக் கைவிட வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்கள் வேண்டுவதைக் கொடுத்தல், நாடுகளை வெல்லுதல், மகன் பிறத்தல் இவை மூன்றும் தனித்தனி சிறப்புப் பெற்றவை.இவை மூன்றும் சேர்ந்தால் மும்மடங்கு சிறப்பு.ஆபத்தில் மாட்டிக் கொண்ட பகைவனை விடுவிப்பதற்கு சமமான சிறப்புப் பெற்றவை.(பகைவனுக்கு அருள்வது சிறப்பான குணமாகும்)

பலகாலமாக நமக்கு உண்மையாக உள்ளவர், ஆதரவாளர் இப்போது உண்மையாக உள்ளவர், நம்மிடம் அடைக்கலம் கேட்பவர் ஆகியவர்களை நமக்கு ஆபத்து வந்தாலும் கைவிடக் கூடாது.

No comments:

Post a Comment