Tuesday, September 22, 2015

12-ஐவகை



தந்தை,தாய், நெருப்பு,ஆத்மா, குரு இந்த ஐந்தும் புனிதமனாவை.ஆற்றல் மிக்கவை, ஒவ்வொரு மனிதனும் இவற்றிற்கு சேவை செய்ய வேண்டும்

கடவுள், முன்னோர், மூத்தோர் (தாய்,தந்தை, குரு), துறவிகள், விருந்தினர்  ஆகியோரை வழிபட்டு, பணிவிடை செய்வதன் மூலம் ஒருவன் முழுமையான புகழ் அடையலாம்

நண்பர்கள், எதிரிகள், காரணமில்லாமல் விசாரிக்க வருபவர்கள், நம்மை ஆதரிக்கும் அயலார், நம்மைச் சார்ந்துள்ள உறவு ஆகிய ஐவகையினரில், யாரேனும் ஒருவர் நம்மை, எங்கும், எப்போதும் பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மெய்,வாய், கண், மூக்கு,செவி..ஆகிய ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருந்தால், அதன் வழி கிடைக்கக் கூடிய நன்மை அல்லது அறிவானது ஓட்டையான பொருளிலிருந்து தண்ணீர் வெளியேறுவது போல நம்மை விட்டு நழுவிச் சென்று விடும்.


No comments:

Post a Comment