Wednesday, September 16, 2015

11 - நான்கு வகையினர்



அரைகுறை அறிவைப் பெற்றவர், தாமதப்படுத்தும் எண்ணத்துடன் காலம் கடத்துபவர்கள், சோம்பேறிகள் , (ஆதாயத்திற்காக) பிறரைப் புகழ்பவர்கள் ஆகிய நான்கு வகையினரிடம் ஆலோசனைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.இவர்களது ஆலோசனைகள் அரசனையும் தோல்வியடையச் செய்யும்..

வயதான உறவினர், உயர் நிலையிலிருந்து வீழ்ச்சியுற்றோர், வறுமையில் வாடும் நண்பர், குழந்தையற்ற சகோதரி இந்த நான்கு வகையினரையும் வசதி,கடமை உணர்வு மிக்கவர்கள் தன் வீட்டில் வைத்து காப்பாற்ற  வேண்டும்

தேவர் தலைவன் இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் "உடன் நிகழக்கூடிய நான்கு சம்பவங்கள் என்ன? என்று கேட்டார்.அதற்கு பிரகஸ்பதி சொன்னார்...

"கடவுளின் விருப்பம், ஞானிகளின் அதிசய ஆற்றல்,அறிஞர்களின் அடக்கக் குணம், பாவிகளின் அழிவு ஆகியவை உடனுக்குடன் நடக்கும்"

அக்னிஹோத்ர வேள்வி,மௌன விரதம்,ஆழ்ந்து படித்தல், வேள்விகள் முதலிய சடங்குகள் இவை நான்கையும் முறையாக, மரியாதையுடன் செய்தால் அவை நம்மைக் கவசம் போல இருந்துக் காப்பாற்றிப் பாதுகாக்கும்.இவற்றைச் சரிவரச் செய்யாவிடின் நன்மை விளையாது என்பதுடன் தீமையே ஏற்படும்.


No comments:

Post a Comment