Saturday, September 5, 2015

8-பொறுமை



பொறுமைசாலிகளிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு.வேறு எந்த குறைகளும் கிடையாது.அந்த ஒரே குறை என்னவென்றால் அவனை மக்கள் பலகீனமானவன் என எண்ணும்படி நடந்து கொள்வான்

உண்மையில் பொறுமை என்பது குறையல்ல.மிகவும் வலிமை வாய்ந்தது.பலகீனமானவர்களிடம் உள்ள பொறுமையும் நற்குணம்தான்.ஆனால் பலசாலிகளின் பொறுமையோ ஒரு ஆபரணம்.

பொறுமை அனைவரையும் வசீகரித்து வசப்படுத்தும் வலிமையைக் கொண்டது.பொறுமையால் சாதிக்கமுடியாத காரியங்களே இல்லை எனலாம்.பொறுமை என்ற வாளை ஏந்தியவனை எந்த தீயவனாலும் ஏதும் செய்ய முடியாது.

புல்லற்ற தரையில் விழும் நெருப்பு தானாகவே அழிந்துவிடும்.அதே வேளையில் சுற்றியுள்ள பொருட்களையும் சேதப்படுத்தாது.பொறுமையற்றவனோ தான் அழிவதுடன் அல்லாது சுற்றத்தினருக்கும் அழிவை உண்டாக்குவான்.

நேர்மை தலை சிறந்த பண்பாகும்.பொறுமைதான் அமைதிக்கு தலை சிறந்த வழி.முழுமையான அறிவே பூரண திருப்தியத் தரும்.பிறருக்குத் தீங்கிழைக்காத தன்மையே மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.


No comments:

Post a Comment