Tuesday, December 15, 2015

29 - பாவச்செயல்கள்



விதுரர் தொடர்ந்தார்...

"திருதராஷ்டிரரே! நாட்டை உங்கள் குடும்பத்தின் வசமே வைத்துக் கொள்ள பொய் பேசுவது சரியல்ல. உண்மையைப் பேசாமல் மறைத்து, உங்களுக்கும், உங்கள் மகன்களாகிய கௌரவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அழிவைத் தேடித் தராதீர்கள்.கால்நடைகளை மேய்க்கும் இடையர் அவற்றைச் சரியான வழியில் நடத்த தடியைப் பயன் படுத்துவது போல..மக்களைக் காத்து நல்வழிப்படுத்தக் கடவுள் தடியெடுப்பதில்லை.மக்கள் தங்களைப் பாதுகாத்து முன்னேற அறிவைத் தந்துள்ளார்.நாம் நல்ல், மங்களகர விஷயங்களில் ர்வ்வளவு அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ ஈடுபடுத்திக் கொள்கிறோமோ அதே விகிதத்தில் நமது விருப்பங்கள் அதிகமாகவோ, குரைவாகவோ நிறைவேறும்.இதில் சந்தேகம் இல்லை.ஒருவன் வேதங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பண்டிதனாயிருப்பான்.ஆனால், அதே சமயம் அவன் மோசடி செய்து ஏமாற்றுபவனாக இருக்கலாம்.அவனை வேதங்கள் பாவத்திலிருந்து காப்பாற்றாது.பறவைகள் இறக்கை முளைத்ததும் பழைய கூட்டை மறந்துவிடுவது போல அத்தகைய பாவியை இறுதி காலத்தில் அவனது வேத அறிவு கை விட்டுவிடும்..

குடிப்பழக்கம், சண்டை போடுதல், மனிதர்களுடன் விரோதம், கணவன் மனைவி இடையே கலகம் மூட்டுதல், உறவினர்களைப் பிரித்து பிளவு உண்டாக்குதல், ராஜத்துரோகம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தகராறு விளைவித்தல் போன்ற செயல்கள் செய்வதை விட வேண்டும்.

முகம், கை பார்த்து சோதிடம் சொல்லுதல், போலி எடைக்கல் வைத்து ஏமாற்றும் வியாபாரி அல்லது திருடி விற்பவர், மோசடிப் பேர்வழி, மருத்துவர், எதிரி, நண்பர், நடிகர் இவர்கள் ஏழு பேரும் சாட்சியம் சொல்ல தகுதியற்றவர்கள் ஆவார்கள்...பிறர் இல்லத்திற்கு தீ வைப்பவர், பிறரை விஷம் வைத்து கொல்பவர், விலை மாதர்களை ஏற்பாடு செய்யும் தரகர்,சாராய வியாபாரி, கோல் மூட்டுபவர்,ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர், காட்டிக் கொடுப்பவர், சதி செய்து நண்பருக்கு துன்பம் விளைவிப்பவர், பிறர் மனைவியை நாடுபவர், கருச் சிதைவு செய்து வைப்பவர், குருவின் மனைவியைக் கெடுப்பவர், கள் குடிக்கும் அந்தணர், குரூரமாக பிறரை ஏசுபவர், பழைய விரோதத்தைக் கிளரி விடுபவர், நாத்திகர்கள், வேதங்களை பழிப்பவர்கள், பேராசைப்பட்டு பணம் பிடுங்கும் புரோகிதர், உரிய வயதிற்குள் பூணூல் அணியாதவர், பசுக்களை கொல்பவர்,அடைக்கலம் புகுந்தவரைக் கொபவர்,இவர்கள் எல்லாம் அந்தணர்களை கொலை செய்யும் பாவிகள் ஆவர்.

(இது நடந்த காலகட்டத்தி ஞாபகம் கொள்ள வேண்டும்.அந்தணர் என்போர் சான்றோர் என வள்ளுவர் சொன்னதையும் நினைவில் கொள்ள வேண்டும்)

அந்தணர் என்போர் அறிவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

அனைத்து உயிர்களிடத்தும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுபவர் ஆவார்

.இரவுநேரத்தில் தீக்குச்ச்யைக் கொளுத்தினால்தான் வெளிச்சம் கிடைக்கும்..பொருள்கள் கண்ணூக்குத் தெரியும்.அதுபோலவே ஒருவன் செய்யும் செயல்கள் மூலமே, அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.அவன் நடந்து கொள்ளும் விதத்தால் எவ்வளவு பண்பாளன் எனத் தெரியும்.ஆபத்தான சூழ்நிலையில் ஒரு தலைவனை அடையாளம் காணலாம்.எதிர்ப்பான பொருளாதாரச் சூழ்நிலையில் ஒருவனின் வீரம் தெரியும்.நமக்குத் துன்பம் ஏற்படுகையில்தான் யார் நண்பர், யார் எதிரி எனத் தெரியும்.

முதுமை , நமது அழகையும்,ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும்.சாவு நம் உயிர் மூச்சை நிறுத்திவிடும்.பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும்.கோபம் செல்வத் திமிரையும், தீயோர் நட்பையும், நமது நன்னடத்தையையும் பாதிக்கும்.காமம் மான உணர்வை மரத்துப் போகச் செய்யும்.கர்வமோ அனைத்தையுமே அழித்துவிடும்.

கோபக்காரனைப் பார்த்து அதிர்ஷ்டம் புன்னகைக்காது.கெட்ட நோக்கம் உள்லவர்களுக்கு நண்பர்கள் உதவ மாட்டார்கள்.குரூரமானவர்களைப் பெண்கள் புறக்கணிப்பர்.மேலோட்டமாக ஈடுபாடு உள்ளவனுக்கு படிப்பு ஏறாது.காமம் மிக்கவன் வெட்கம் கெட்டவனாக இருப்பான். சோம்பேறிக்கு வாழ்க்கை வசதி கிடைக்காது.மன உறுதியுடன் செயலாற்றாதவன் எதையும் சாதிக்க இயலாது.

நல்ல மங்களமான செயல்களின் மூலம் செல்வம் ஏற்படும்.திறமையின் மூலம் அது வேரூன்றும்.உழைப்பின் மூலம் அது விரிவடையும்.மனக்கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் அது நிலைத்து நிலைபெறும்.

இனி கோபம்பற்றியும், நட்பு பற்றியும் வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்

நட்பு பற்றி..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு

நாம் அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவுகையில் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனை சரிசெய்ய உதவுகிறதோ அதுபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்க துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தைக் கைவிட வேண்டும்.அல்லையேல், அந்தக் கோபம் அவனையே அழித்துவிடும்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற கோபம் கொள்பவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்.சினத்தைத் துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

No comments:

Post a Comment