Friday, December 25, 2015

31-பாவ புண்ணியம்



வாய்மை,பணிவு,ஆன்மீகப் பயிற்சி,நூல் அறிவு,உயர் குடிப் பிறப்பு,ஒழுக்கம்,மனவலிமை,நல் வழியில் சம்பாதித்த செல்வம்,வீரம், பல விஷயங்களை இனிமையாய்ப் பேசும் திறன் ஆகிய பத்தும் சுவர்க்கத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்லும் வழியைக் காட்டும்

ஒருவன் பாவச்செயலைப் புரிந்தால் அதன் விளைவாக பாவி என்று சொல்லப்பட்டு இகழப்படுவான்.அதனால் தண்டனையும் பெறுவான்.அதுவே, ஒருவன் நற்செயல் புரிந்தால் அவன் புண்ணியவான் எனப் புகழ்ப் பெறுவான்.அச்செயலால் பிற்காலத்தில் நல்ல பலனையும் பெறுவான்

ஆகவே, நாம் பாவச்செயல் புரிய மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் பாவச் செயல் புரிபவனின் அறிவு மழுங்கிவிடும் .இவ்வாறு அறிவை இழப்பவன் பாவச் செயல்களையேச் செய்வான்.மாறாக நல்ல செயல்களைச் செய்து வந்தால் நம் அறிவு மேலும் வளரும்

நல்லறிவு கொண்டவன் புண்ணியச் செயல்களில் ஈடுபடுவான்.புகழ் பெறுவான்.இறுதியில் அவன் சுவர்க்கத்தைச் சென்றடைவான்.ஆகவே ஒருவன் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்

பொறாமை கொள்பவன், பாம்பு போல மனதில் விஷம் நிறைந்தவன்.கொடூர இதயம் படைத்தவன்.கடுஞ்சொல் கூறுவோன்.வேண்டுமென்றே பிறரிடம் விரோதம் கொள்வோன்.மோசடி செய்வோன்.ஆகியோர் பாவச் செயல்கள் புரிவோர் ஆவர்.அவர்கள் விரைவில் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்

ஒருவன் பிறரிடம் பொறாமை கொள்ளாதவனாகவும், நல்லதை பிரித்தறியும் விவேகம் உள்ளவனாகவும், பின் நல்லதை மட்டுமே செய்பவனாகவும் இருந்துவிட்டால் அவனுக்கு துன்பம் நேராது.மேலும் அவன் எளிதில் புகழப்படுவான்.

அறிவுள்ள மனிதன் தயங்காமல் மற்ற அறிஞர்களின் அறிவையும் திரட்டிப் பெற்று மேலும் அறிஞன் ஆவான்.அவன் நற்பண்புகளை கடைப்பிடிப்பான்.நேர்மையான ,முறையில் வாழ்க்கை வசதிகளைச் சேகரித்துக் கொள்வான்.இதனால் மேன்மேலும் மகிழ்ச்சி அடைபவனாக முன்னேறுவான்

நாம் இரவில் மகிழ்ச்சியாகத் தூங்க உதவும் வகையில் பகலில் செய்யும் வேலையின் தன்மையின் அளவும் அமைந்திருக்க வேண்டும்.மழைக்காலமான நான்கு மாதங்களில் நாம் வாழ உதவியாக எட்டு மாதங்களில் செய்யும் வேலையின் தன்மையும், அளவும் அமைய வேண்டும்

நாம் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்றபடி வாழ்க்கையின் தொடக்கத்திலேயே செய்கின்ற வேலையின் தன்மையும், அளவும் அமைந்திருக்க வேண்டும்.இவ்வுலகை விட்டு நாம் சென்றாலும் சுவர்க்கத்தில் மகிழ்வோடு வாழ உதவும் வகையில் வாழ்க்கை முழுதும் நாம் செய்கின்ற வேலையின் தன்மை அமைய வேண்டும்

அறிஞர்கள் அவசரப்பட்டு எதையும், யாரையும் புகழ்ந்துவிட மாட்டார்கள்.அவர்கள் எளிதில் ஜீரணமானபின்பே குறிப்பிட்ட உணவையும்,நடுத்தர வயதைக் கடந்துவிட்ட பிறகே மனைவியையும், போரில் வெற்றி பெற்ற பிறகே வீரனையும்,தன்னை அறிந்து ஆத்ம தரிசனம் பெற்ற பிறகே துறவியையும் புகழ்வார்கள்

ஒருவன் தவறான வழியில் செல்வம் சம்பாதித்து பிறகு அதைக்கொண்டு அத்தவறை மூடி மறைக்க முயற்சித்தால் அது பலனளிக்காது.அது மட்டுமின்றி வேறு பல தவறுகளும் ஏற்பட்டுவிடும்

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவர்களை ஆன்மீகக்குரு அடக்கியாள்கிறார்.கொடியவர்களை அரசர் தண்டனைகள் மூலம் அடக்கிகிறார்.விவஸ்வத் எனப்படும் சுரியனின் மகனாகிய வைவஸ்தர் என்னும் யமன் ரகசியமாகப் பாவம் செய்தவர்களையும் கண்டுபிடித்து அடக்கிவிடுகிறான்

ரிஷிமூலம், நதிமூலம் ,உத்தமர்களின் குலத்தின் மூலம் ஆகியவற்றைத் தேடி ஆராய்ந்துக் கொண்டிருக்கக் கூடாது.பெண்கள் கெட்டுப்போனால் அவர்கள் மேற்கொள்கின்ற தந்திரமான வழிகளில் மூலத்தையும் கண்டறிய இயலாது

எந்தச் சத்திரியர் அந்தணர்களை  போற்றுகிறாரோ , நிறைய தான தருமம் செய்கிறாரோ,உறவினர், சுற்றத்தாருடன் மென்மையாக, நேர்மையாக பழகுகிறாரோ, ஒழுக்கமான நடத்தை கொண்டுள்ளாரோ அவர் நெடுங்காலம் உலகை ஆள்வார்

வீரம் மிகுந்தவர்கள்,அறிவு மிக்கவர்கள்,மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை உணர்வு மிகுந்தவர்கள் ஆகிய மூன்று வகையினரும் தங்க மலர்களால் ஆன உலகத்தைப் பரிசாகப் பெறுவர் (செல்வச் செழிப்புடன்விளங்குவர்)

மூளையின் உதவியுடன் செயல்படும் செயல்கள் உயர்தரவையாக இருக்கும். கைகளில் உதவியுடன் செயல்படுபவை நடுத்தரமானவையாகும்.தொடைகளால் செயல்படுபவை மோசமானதாக இருக்கும்.தலையால் செய்யப்படும் (பாரம் தூக்குதல் போன்றவை) தாழ்ந்ததாக இருக்கும்

திருதராஷ்டிரரே! இந்த நாட்டில் ஆட்சியை துரியோதனன்,சகுனி, துச்சாதனன், கர்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்.இப்படிப்பட்ட நிலையில் நாடு வளம் பெற்று விளங்கும் என எப்படிச் சொல்வது?

இதற்கு மாறாக பாண்டவர்கள் ஐவரும் நற்குணங்கள் நீரைந்து விளங்குகிறார்கள்.உங்களைத் தங்களதுத் தந்தையாகவே எண்ணி மதிக்கின்றனர்.ஆகவே நீங்களும் அவர்களை உங்கள் புதல்வர்களாக எண்ணி அந்த முறையில் நடத்துங்கள்

என்று விதுரர் கூறி முடித்தார்.

இனி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் எனப் பார்ப்போம்


பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழத்திரட்டிய செல்வம் அழ அழப் போய் விடும்.நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்


No comments:

Post a Comment