Monday, October 12, 2015

15- ஒன்பதும்...பத்தும்



இந்த வீட்டிற்கு ஒன்பது வாயில்கள்.தூண்கள் மூன்று, பணியாட்கள் ஐவர்.இதன் முதலாளி ஆத்மா. இதை சரியாக அறிந்துள்ளோரே முழுதும் தேர்ச்சிப் பெற்ற முனிவர்கள் ஆகும்.

(உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்கள் இங்கு வாயில்கள் எனப்படுகிறது.வாதம், சிலேட்டுமம்,பித்தம் ஆகியவை மூன்று தூண்கள்.ஐம்புலன்களும் நம் ஊழியர்.அவை நமக்குக் கீழ் படிந்து இருக்க வேண்டும்.வீடும், வீட்டில் இருப்போரும் வேறு..உடல் வேறு, ஆத்மா வேறு.)

கிழே கொடுக்கப்பட்டுள்ள பத்துவகை மனிதர்களால் நற்பண்புகளை நினைவில் கொள்ள முடியாது.ஆகவே அவற்றை பின் பற்ற முடியாது.

போதையில் மிதப்பவன்
எதிலும் கவனக் குறைவாக இருப்பவன்
பித்துப் பிடித்தவன்
களைத்து ஓய்ந்தவன்
அதிகக் கோபம் கொண்டவன்
பசியால் துடிப்பவன்
அவசரப்படுபவன்
பிறர் பொருளைக் கவர நினைப்பவன்
பயத்துடனேயே இருப்பவன்
மிகுதியான காம உணர்வு கொண்டவன்

ஆகியவர்கள் பண்பாளராக இருக்க முடியாது.ஆகவே இக்குறைபாடுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment