Saturday, October 31, 2015

22- நன்னடத்தை.....



படிப்பதால் வரும் கர்வம், செல்வ வசதியால் வரும் கர்வம், உயர் குலத்தில் பிறந்ததால் வரும் கர்வம் இம்மூன்று வகை கர்வங்களும் சாதாரண மனிதனைத் திமிராக நடந்து கொள்ள வைக்கும்.ஆனால் நற்பண்புகளைக் கொண்டவன் இந்த மூன்று வகைக் கர்வங்களையும் தன் முன்னேற்றத்திற்குத் தடையாகக் கருதுவான்

நல்லவர்களும், எக்காலத்திலாவது, எதற்காகவாவது தீயவர்களிடம் உதவி கேட்க நேரிடலாம்.உடன் தீயவர்கள் தாங்கள் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என கர்வம் கொள்வர்

உத்தமர்களிடம் அனைவரும் அடைக்கலமாகலாம்.சுயக்கட்டுப்பாடும், நற்பண்புகளும் உடையவர்களும் மட்டுமல்ல,தீயவர்களும் அவர்களை அடைந்து ஆதரவும், பாதுகாப்பும் பெறலாம்.ஆனால் தீயவர்கள் நல்லவர்களுக்கு புகலிடம் அளிப்பவராக விளங்க முடியாது.(தீயவர்களையும் நல்லவன் கைவிட ,மாட்டான்.ஆனால் தீயவன், நல்லவர்களுக்கு உதவவும் மாட்டான்.ஆபத்தையும் ஏற்படுத்துவான்)

சிறப்பாக ஆடை அணிபவன் அதற்கு மதிப்பவர்களைக் கவர்ந்து விடுவான்.காலநடை செல்வம் உள்ளவன் உணவு விஷயத்திலான விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்.வாகன வசதியைக் கொண்டவன் சாலையை விரைவில் கடக்கும் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வான்.ஆனால், நன்னடத்தை உள்ள மனிதன் தன் நற்பண்புகள் மூலம் எல்லோரையும் கவர்ந்து அவர்கள் மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்

ஒருவன் நீண்ட ஆயுள், அதிக செல்வம், அதிக உறவினர் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கலாம்.ஆனால், வாழ்க்கையில் நல்ல நடத்தை உயிருக்கு சமமானது.நல்ல நடத்தி இல்லாதவன் ஒருவன் வாழ்க்கையில் நல்ல பயன் பெற முடியாது. 

No comments:

Post a Comment