Tuesday, October 20, 2015

18-விதுரரின் பதில்



விதுரர் பதில் கூறலானார்-

ஒருவர் நம்மைக் கேட்டுக் கொள்ளாதவரை நாம் அவருக்கு ஆலோசனை சொல்லக் கூடாது.நல்லதோ, கெட்டதோ, பிரியமானதோ,பிரியமற்றதோ எவ்வகை ஆலோசனையும் சொல்லக்கூடாது.புத்திமதி கூறினால் நம் மரியாதை கெட்டுவிடும்

நீங்கள் என்னை ஆலோசனைக் கேட்டதால்...கௌரவர்களுக்கு என்ன நன்மை பயக்குமோ அதைச் சொல்கிறேன்.இது, மகிழ்ச்சியளிப்பதாகவும், அறநெறிப்படியும் இருக்கும்.

மோசமான செயல்களும், தீய வழிமுறைகளும், அதனால் செய்யப்படும் செயல்களும் முதலில் வெற்றியைத் தருவது போலத் தெரியும்,அதை நம்பக்கூடாது.(சகுனியின் சூதாட்ட வெற்றியை மறைமுகமாகச் சொன்னதாகக் கொள்ளலாம்)

அதே சமயம் மறுபுறம், ஒழுங்காக, கவனமாக உழைத்து, நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றினாலும் அவை நம் முயற்சிக் கேற்ற பலன் தராதிருக்கலாம்.அறிஞன் ஒருவன் இந்த முறன்பாட்டைக் கண்டு மனமொடியக் கூடாது.நாம் விரும்பும் செயல்கள் வேறு பல நபர்களுடன் தொடர்புடையதாக இருப்பின்...நாம் அவற்றை சரியாகக் கவனித்து மதிப்பிட வேண்டும்.நாம் தொடங்கவுள்ள வேலையின் நன்மை, தீமைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.அதன் பின்னரே வேலையைத் தொடங்க வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு எந்த வேலையையும் மேற்கொள்ளக் கூடாது.

)

No comments:

Post a Comment