Monday, October 19, 2015

17- திருதிராட்டிரர் மேலும் கேட்டார்



விதுரன் கூறியவற்றைக் கேட்ட திருதிராட்டிரரின் மனம் சமாதானம் அடையவில்லை.சஞ்சயன்மூலம் தருமர் அனுப்பியுள்ள செய்தி என்னவாய் இருக்கும் எனத் தெரியாது தவித்தார்.அச் செய்தியை ஓரளவு விதுரரால் யூகிக்கமுடியும் என எண்ணி விதுரரிடம் சொன்னார்.

:என் உடல் கவலைக் காரணமாக தகிக்கிறது.தூக்கம் வராமல் அவதிப்படும் எனக்கு நன்மை ஏற்பட ஒரு நல்வழி கூறுவாயாக1 நீ சாஸ்திரங்கள்,புனித நூல்களைக் கற்றவன்.உலகியல் நூல்களையும் முற்றும் பயின்றவன்.அப்படிப்பட்ட நிபுணன் நம்மிடையே நீ மட்டுமே!

ஆகவே, உன் விவேகத்தைப் பயன்படுத்தி எனக்குச் சரியான ஆலோசனை வழங்கு..அது, தருமபுத்திரர்களுக்கும்,கௌரவர்களுக்கும் திருப்தியும், நன்மையும் தருவதாய் இருக்க வேண்டும்.

நான் ஏற்கனவே பாண்டவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள பாவங்களை சுமந்துள்ளேன்.எதிர்காலத்தில் நடைபெறும் செயல்களும் பாவமயமாகவே இருக்கப் போகிறதே என அஞ்சுகிறேன்.இந்நிலையில் உன் ஆலோசனை அவசியம்.தருமன் ,சஞ்சயன் மூலம் அனுப்பியுள்ள செய்தி என்னவாக இருக்கும்?என யூகித்துச் சொல்" என்றார்.

No comments:

Post a Comment