Sunday, October 25, 2015

19-காலம் கனியும் வரை காத்திருத்தல்



அறிவாளி எனப்படுபவன் தான் செய்யும் செயலுடன் தொடர்புடைய சாதக, பாதக அம்சங்களையும், அதனால் ஏற்படும் சாதக, பாதக விளைவுகளையும், மேலும் அச்செயலை நிறைவேற்ற தன்னிடம் ஆற்றல் உள்ளதா? அது தன்னை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறகே அச்செயலில் இறங்க வேண்டும்.மேற்கண்டவை அவனுக்கு சாதகமாக இல்லாவிடில் அப்பணீயை எடுத்துக் கொள்ளக் கூடாது

அரசன் (ஆட்சி செய்பவன்) தன் தலைநகர், தன் ஆட்சி ஆகியவற்றின் பாதுகாப்புத் த்ன்மை, நிதி நிலமை, தன் நாட்டு நிலப்பகுதியில் உள்ள நிறை, குறை, த்னது படை ஆகியவற்றின் அதுக பட்ச அளவு ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்,இவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளாதவர் நீண்ட காலம் ஆட்சியில் நிலைக்கமுடியாது.

அரசன், (ஆட்சி புரிபவன்) தன்னிடம் மேற்கண்டவை சாஸ்திரங்களில் கூறப்பட்ட அளவு போதுமானதா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.அத்துடன், அவர் நற்பண்பு கொண்டவராயும், பொருளாதார அறிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட ஆட்சியாளரின் ஆட்சியை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் ஆவார்.

ஒரு நாட்டை வென்று விட்டோம் (அல்லது ஆட்சியைப் பிடித்து விட்டோம்) என்று அலட்சியமாக ஆட்சி செய்வது பெரிதல்ல.அழகான உடலையும் முதுமை காலப்போக்கில் சிதைப்பது போல, ஆட்சி தன் வசம் உள்ளது என திமிருடன் இருந்தால் அந்த ஆட்சி அழிந்து போகச் செய்து விடும்.

இரைக்கு ஆசைப்பட்டு மீன், தூண்டிலிலுள்ள புழுவுடன் இரும்பு முள்ளையும் சேர்த்து இழுத்து இறக்கிறது.பின் விளைவுகளைப் பற்றி அது யோசிப்பது இல்லை.(நாமும் சாதக, பாதகங்களை பற்றி யோசிக்காது, ஒரு செயலில் இறங்கக் கூடாது.

வளமாக இருக்க எண்ணுபவன், தனக்கு ஏற்ற உணவையே, தன்னால் சாப்பிடக்கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடிய உணவையே, செரித்தால் நன்மை தரக்கூடிய உணவையே உண்ண வேண்டும்.(நம் உடலுக்கு ஏற்ற உணவை உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.எல்லை மீறினால் நோய்தான்)

பழுக்காத கனிகளை பறித்து நாம் சாறு பிழிய முயன்றால் தோல்வியே ஏற்படும்.பாதி பழுத்த அக்கனியில் உள்ள விதைகளும் பலனின்றி போகும்.(எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டும்).சரியான பழத்தைப் பறித்தால் அதில் சுவையான சாறு இருக்கும்.அதிலுள்ள விதைகளும் பூமியில் விழுந்து மீண்டும் மரமாகும்.அதுவே பிறகு பலருக்குக் கூடுதலான பழ்னகளை வழங்கும்.



தேனீ மலர்களைச் சேதப்படுத்தாமல் தனக்குத் தேவையான அளவு தேனை எடுத்து சேகரிக்கும்.அதுபோல அரசனும் (ஆட்சியாளரும்) மக்களைப் பிழியாமல் அளவிற்குட்பட்டு மென்மையாக வரி வசூலிக்க வேண்டும்

தோட்டக்காரன் மலர்ந்த பூக்களை, செடிகளை சேதப்படுத்தாமல் பறிப்பான்.விறகு வெட்டியோ விறகு தயாரிக்க மரங்களை வேரோடு வெட்டுவான்.(அரசன் வரி விதிப்பு என்ற பெயரில் மக்களை ஏழைகள் ஆக்கிவிடாது, வசதியுள்ளவர்களிடம் மட்டும் வரி வசூலிக்க முயற்சிக்க வேண்டும்)

ஒரு செயலைச் செய்வதால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என அறிந்து கொள்ள வேண்டும்.அதை செய்யாவிடினும் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் உணர வேண்டும்.இரண்டையும் ஒப்பிட்டுச் சிந்தித்தப் பிறகே நம் செயல்களை செய்ய வேண்டும்.அச் செயலால் பாதகம் என்றால் செய்யக்கூடாது

செயல்கள் பலவகையாகும்.சில செயல்களில் ஈடுபடக்கூடாது.சில செயல்களை முழுமையாக நம்மால் செய்து முடிக்க இயலாது.பலனில்லா அச்செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைப்பது வீணாகும்

No comments:

Post a Comment