Saturday, October 31, 2015

23- செல்வம்



செல்வந்தர் உணவில் இறைச்சி அதிகம் இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் உணவு நெய்யும், அதனால் தயாரான உணவு வகைகளும் இருக்கும்.ஆனால் ஏழைகள் உணவோ எண்ணெயில் ஆகியவனவாகவே இருக்கும்

ஏழைகளுக்கு எப்போதும் நன்கு பசி எடுத்து, ருசியைத் தூண்டுகிறது. . ஆதலால், அவர்கள் உணவை ரசித்தும்,ஆர்வத்துடனும்,முழுமையாகவும் உண்கின்றனர்.ஆனால், பணக்காரர்களோ பசித்து உண்ணுவதில்லை.ஆகவே, முழுமையாக அனுபவித்து உண்ணும் வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகும்.

ஏழைகளுக்கு நல்ல சீரண சக்தி உண்டு..மரத்துண்டைக் கூட அவர்களால் செரிக்க முடியும்.ஆனால், பணக்காரனோ, எதிர்ப்பு சக்திக் குறைவால் சரியாகச் சாப்பிட இயலாது தவிப்பர்

அச்சம் மூன்று வகையாகும்.சமூகத்தில், அடித்தள மக்கள் உயிர் வாழ வேலையில்லாமல் போய்விடுமோ என அஞ்சுகின்றனர்.நடுத்தர மக்கள் (வசதி வருமுன்)சாவு வந்துவிடுமோ  என அஞ்சுகின்றனர்.உயர் வர்க்கத்தினர் தங்களுக்கு அவமரியாதையோ, அவமானமோ ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் போதையைவிட, செல்வ மிகுதியால் ஏற்படும் போதை ஆபத்தானது.செல்வத்தால் ஏற்படும் போதைக்கொண்டவன் பேரழிவு ஏற்பட்ட பின்னரே சுயநினைவு அடைகிறான்.(பணத்திமிர் செல்வம் அழியும் வரை நீடிக்கும்)



No comments:

Post a Comment