Friday, January 29, 2016

84)பேதைமை

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதே
பேதைமை எனப்படும்.

2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.

3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்
அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.

4.நூல்களை படித்து உணர்ந்து,அவற்றை பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் செய்துவிட்டு தாங்கள் மட்டும் அப்படி
நடக்காவிட்டால் அவர்கள் பேதைகள் ஆவார்கள்.

5.தன்னிச்சையாக செயல்படும் ஒரு பேதை..ஏழேழு பிறப்பிற்கும் துன்பமெனும் சேற்றில் அழுந்தி கிடக்க நேரிடும்.

6.ஒழுக்க நெறி இல்லாத ஒரு மூடன்..ஒரு செயலை மேற்கொண்டால்..அதைத் தொடரவும் முடியாமல்..அச்செயலும்
கெட்டு தானும் தண்டனை அடைவான்.

7.அறிவில்லாதவனிடம் சேரும் பெரும் செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ள பயன்படுமேயன்றி..பாசமுள்ள
உறவினர்களுக்கு பயன்படாது.

8.முட்டாளின் கையில் பொருள் கிடைத்து விட்டால்..அவன் நிலை பித்து பிடித்தவன் கள்ளையும் குடித்து
மயங்கும் கதை ஆகிவிடும்.

9.அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது..ஏனெனில் அவர்களிடமிருந்து பிரியும் போது
வருத்தம் ஏற்படாது.

10.அறிஞர்கள் கூட்டத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலை கழுவாமல் படுக்கையில்
வைப்பது போன்றது.

85)புல்லறிவாண்மை

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்
பொருட்படுத்தப்படுவது இல்லை.

2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...
அது அப்பொருளை பெறுகிறவன் பெற்ற பேறு தான்.

3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும் ஆணவமே..
அறியாமை எனப்படும்..

5.அறிவற்றவர்..தான் படிக்காத நூல்களையும் படித்ததுபோல காட்டிக் கொண்டால்..அவர்களுக்கு தெரிந்த
விஷயங்கள் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

6.தனது குற்றத்தை அறிந்து நீக்காதவன் உடலை மறைக்க மட்டும் உடை
அணிவது மடைமையாகும்.

7.நல்வழிக்கான அறிவுரைகளை ஏற்று...அதன்படி நடக்காத அறிவற்றவர்கள் தனக்குத்தானே
பெருந் துன்பத்தைத் தேடிக்கொள்வர்.

8.சொந்தபுத்தியும் இன்றி..சொல்புத்தியும் கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதும்
அந்நோயினால் துன்பமடைவர்.

9.அறிவு இல்லாதவன் தான் அறிந்ததை வைத்து அறிவுடையவனாகக் காட்டிக்கொள்வான்
ஆனால் அவனுக்கு அறிவுரை கூறும் அறிவுள்ளவன் அறிவற்ற நிலைக்கு தன்னையே தள்ளிக்
கொள்ள நேரிடும்.

10.உலகத்தார் உண்டு என்று சொல்வதை ..இல்லை என்று கூறுகிறவன்...ஒரு பேயாக
கருதி விலக்கப்படுவான்.

86)இகல்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.

2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாக
அவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.

3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.

4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும் இன்பமாகும்.

5.மனதில் மாறுபாடு உருவானால் அதற்கு இடம் தராது..நடக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களை வெல்லுதல் முடியாது.

6.மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி எளிது என எண்ணுபவர் வாழ்வு..விரைவில் தடம் புரண்டு கெட்டொழியும்.

7.பகை உண்ர்வுள்ள தீய அறிவை உடையவர் வெற்றிக்கு வழிவகுக்கும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

8.மனதில் உண்டாகும் மாறுபாட்டை நீக்கிக்கொண்டால்.. நன்மையும்..இல்லையேல் தீமையும் விளையும்.

9.தனக்கு நன்மை வரும் போது மாறுபாட்டை நினைக்கமாட்டான்.ஆனால் தனக்குத்தானே கேடு
தருவித்துக் கொள்ளும்போது அதை எதிர்ப்பான்.

10.மாறுபாடு கொண்டு பகை உணர்வைக் காட்டுவோரை துன்பங்கள் தொடரும்.நட்புணர்வோடு
செயல்படுவோர்க்கு நற்பயன் விளையும்

87)பகைமாட்சி

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.

2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர்
பகையை எப்படி வெல்லமுடியும்?

3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்
இருப்பவனை வெல்லுதல் எளிது.

4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.

5.நல்வழி நாடாமல்,பொருத்தமானவற்றைச் செய்யாமல்,பழிக்கு அஞ்சாமல்,பண்பும் இல்லாமல்
இருந்தால் எளிதில் வெல்லப்படுவான்.

6.யோசிக்காத சினம் உடையவனையும்,பேராசைக் கொண்டவனையும் பகையாக ஏற்று எதிர்கொள்ளலாம்.

7.தன்னுடன் இருந்துக்கொண்டு,தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனை
பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

8.குணம் இல்லாதவன்,குற்றம் பல செய்தவன் ஆகியவர்களுக்கு துணை யாரும் இருக்கமாட்டார்கள்.
அதனால், அவனை பகைவர்கள் எளிதில் வீழ்த்துவர்.

9.அறிவற்ற கோழைகள், எதற்கும் பயப்படும் இயல்புடையோர் ஆகியோரின் பகைவர்கள் எளிதில் வெற்றிப் பெறுவர்.

10.கல்வி கற்காதவர்களைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய முடியாதவனிடம் என்றும் புகழ்
வந்து சேராது.

88)பகைத்திறம் தெரிதல்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.

2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.

3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.

4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.

5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ இல்லை..அப்படிப்பட்ட சமயத்தில் அந்த பகைவரில் ஒருவனை
இனிய துணையாக்கிக் கொள்வதே அறிவுடைமை.

6.பகைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும்..இல்லாவிட்டாலும்..கேடு ஏற்படும் காலத்தில் அவனை அதிகம்
நெருங்காமலும்..நட்புக்காட்டியும் சும்மா இருக்க வெண்டும்.

7.நம் துன்பத்தை, அறியாத நண்பருக்கு சொல்லக்கூடாது.அதுபோல நம் பலவீனத்தையும் பகைவரிடம்
வெளிப்படுத்தக்கூடாது.

8.செய்யும் வகையை உணர்ந்து,தன்னையும் வலிமைப் படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக்கொண்டால்
பகைவரின் ஆணவம் அடங்கிவிடும்.

9.முள் மரத்தை செடியிலேயே வெட்ட வேண்டும்..பகையையும் அது முற்றும் முன்னே வீழ்த்திட வேண்டும்.

10.பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள்..மூச்சு விட்டாலும் ..உயிரோடு இருப்பதாக
சொல்ல முடியாது.

89)உட்பகை

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்
உறவினரின் உட்பகையும்.

2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்
கருவி போல அழித்துவிடும்.

4.மனம் திருந்தா உட்பகை உண்டாகுமானால்..அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டை
உண்டாக்கும்.

5.நெருங்கிய உறவுகளிடையே தோன்றும் உட்பகை..அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய துன்பங்களை
உண்டாக்கும்.

6. உற்றாரிடம் பகைமை ஏற்படுமானால்..அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது அரிதான செயலாகும்.

7.ஒரு செப்பு சிமிழின் மூடி பொருந்தி இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தெரியும்..அதுபோல உட்பகை
உள்ளவர் ஒன்றாக இருப்பது போலத் தெரிந்தாலும், பொருந்தி இருக்க மாட்டார்கள்.

8.அரத்தினால் அறுக்கப்பட்ட இரும்பு வலிமை இழப்பது போல..உட்பகை குலத்தின் வலிமையை குறைத்துவிடும்.

9.எள்ளின் பிளவு போன்று சிறியதாக இருந்தாலும்..உட்பகை குடியைக் கெடுக்கும்.

10.மனதால் உடன்பட்டு இல்லாதவருடன் கூடி வாழ்வது என்பது ஒரு சிறு குடிசையில் பாம்புடன்
வாழ்வது போல அச்சம் தருவதாகும்

90)பெரியாரைப் பிழையாமை

1.ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தலே..நம்மை காத்திடும் காவல்கள்
அனைத்தையும் விடச் சிறந்த காவலாகும்.

2.பெரியோர்களை மதிக்காமல் நடந்தால்..நீங்காத துன்பத்தை அடைய நேரிடும்.

3.பகையை அழிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காது இழித்துப் பேசினால்..அவன் தன்னைத்தானே
அழித்துக் கொள்கிறான் என்று பொருள்.

4.ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றலற்றவர் தீமை செய்தால்..தங்கள் முடிவுக்காலத்தை அவர்களே
அழைத்துக் கொள்வது போலாகும்.

5.வலிமை பொருந்திய அரசின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்றாலும் உயிர் வாழ முடியாது.

6.தீயால் சுட்டால் கூட ஒரு வேளை உயிர் பிழைக்கலாம்..ஆற்றல் மிக்கவரிடம் தவறிழைப்பவர் தப்பிப்
பிழைக்க முடியாது.

7.பெருஞ்செல்வத்துடன் சுகமாக இருந்தாலும்..பெரியோரின் கோபத்துக்கு ஆளானவர்கள் முன் அனைத்தும்
பயனற்றதாய் விடும்.

8.மலை போன்ற பெருமை கொண்ட பெரியவர்களை குலைக்க நினைத்தால்..பெருஞ்செல்வந்தரும் குடியோடு அழிவர்

9.உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்கள்..கோபமடைந்தால் அரசனும்..அரசு இழந்து அழிவான்.

10.வசதி வாய்ப்புக்கள்,வலிமையான துணைகள் உடையவராக இருந்தாலும் சான்றோரின் சினத்தை எதிர்த்துத்
தப்பிப் பிழைக்க முடியாது.

No comments:

Post a Comment