Tuesday, January 5, 2016

38- தவிர்க்கப்பட வேண்டியவர்கள்



நாம் குறிப்பிட்ட சிலரை நம் வீட்டில் தங்க அனுமதிக்கக் கூடாது.சோம்பேறி, மிகையாக உண்பவன்,சமூகத்தால் வெறுக்கப்படுபவன்,மோசடிக்காரன்,கொடூரமானவன்,இடம்-காலம் அறிந்து பழகத் தெரியாதவன்,அசிங்கமாக உடை அணிபவன் ஆகியோரை வீட்டில் தங்கவிடக் கூடாது.

நமக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், குறிப்பிட்ட சிலரிடம் உதவி கேட்கக் கூடாது.கருமி,நம்மை ஏசுபவர்,கல்வி அறிவற்றவர்,காட்டுவாசி,போக்கிரி,தகுதியுடைவருக்கு மரியாதை காட்டத் தவறுபவர்,கொடூர குணம் கொண்டவர்,நமது எதிரி,நன்றி கெட்ட்வர் ஆகியோரிடம் உதவி கேட்கக் கூடாது

நாம் எப்போதும் குறிப்பிட்ட சில வகையினருக்கு உதவக் கூடாது.பிறரது வீட்டைக் கொளுத்துதல் போன்ற பயங்கர பாவங்கள் செய்பவன்,எப்போதும் தவறு செய்து கொண்டே இருப்பவன்.எப்போதும் பொய் பேசுபவன்.கடவ்ள் மீது உறுதியான பக்தியற்றவன்.அன்பில்லாதவன்.தான் ஒருவனே அறிவாளி என திமிருள்ளவன் இந்த ஆறு வகையினருக்கு உதவுவதோ அல்லது அவர்களிடம் பணிபுரிவதோ கூடாது

(பயங்கர பாவங்கள்- பிறர் வீட்டைக் கொளுத்துதல்,விஷம் கொடுத்துக் கொல்லுதல்,ஆயுதத்தால் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பிறர் செல்வத்தை அபகரித்தல்,பிறர் நிலத்தை ஆக்கிரமித்தல், பிறர் மனைவியின் கற்புக்குக் கேடிழைத்தல் ஆகியவை ஆகும்)

நம்முடைய செயல்களின் விளைவுகள்,நாம் அவற்றை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பொறுத்து அமைகின்றன.நாம் எந்த வழிமுறைகளை மேற்கொள்கிறோம் என்பது நாம் அடைய விரும்பும் பலன்களுக்கு ஏற்ப அமைகிறது.இவ்வாறு செயல்கள்,வழிமுறைகள்,விளைவுகள் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன

நம்முடைய கடமை என்ன வென்றால், முதலில் மகன்களையும்,மகள்க ளையும்  பெற்றெடுக்க வேண்டும்.மகன்களை பிரச்னையில்லா நல்ல வேலைகளில் அமர்த்த வேண்டும்.பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.இவ்வாறு கடமைகளை நிறைவேற்றிய பின்னர் நாம் காட்டிற்குச் சென்று...வாழ்நாளின் கடைசிப் பகுதியை முனிவர்கள் போல வாழ்ந்து கழிக்க வேண்டும்

நாம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மையும், நமக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் செயல்களையேச் செய்ய வேண்டும்.அவற்றையும் அவற்றின் நற்பலனையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.இத்தகைய மனப்போக்கு அமைந்தால் நம்முடைய குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறும்

ஒருவன் அறிவு,திறமை, நெருப்பைப்போலத் தீவிரம்,வலிமை,உழைப்பு,உறுதி ஆகிய குணங்களைப் பெற்றிருந்தால் அவன் வேலை எதுவும் கிடைக்காமல் போய்விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை

No comments:

Post a Comment