Saturday, January 16, 2016

45-நட்பைத் தேர்ந்தெடுத்தல்



புத்திசாலியான மனிதன் தனது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து அறிஞர்களுடன் நட்பு கொள்ள வேண்டும்.நல்லது-கெட்டது அறிந்து நண்பர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.இதற்காக தனது காதுகளையும், கண்களையும் , விவேகத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம்.வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.பொறுமையின் மூலம் கோபத்தை வெல்லலாம்.நன்னடத்தையின் மூலம் எல்லா அம்சங்களையும் நீக்கலாம்

ஒரு மனிதனின் குலமரபின் உயர்வை அவன் பயன்படுத்தும் அல்லது வைத்துக் கொண்டிருக்கும் பொருட்கள், சொந்தமாகக் கொண்டுள்ள நிலம், வீடு,பொதுவான நடத்தை, உணவுப் பொருட்கள், உடைகள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிட வேண்டும்

உலகப் பற்றுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனும், புலன் நுகர்ச்சிக்குரிய ஏதேனும் தன்னை வந்தடைந்தாலும், அதை மறுத்து அனுபவிக்காமல் இருந்துவிட மாட்டான்.பற்றற்றவன் நிலையே இப்படியெனில், ஆசைகளில் நிரம்பிவழியும் சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

நம்முடன் பழகுபவர்களில் நல்லறிவை பெற்றவர்களையும்,அறிவாளிகளைச் சார்ந்திருப்பவர்களையும், நல்ல நடத்தை, இனிய தோற்றம், சுமுகமாகப் பழகுதல், இன்சொல் கூறும் பண்பு ஆகிய சிறப்புகள் உடையவர்களையும் நாம் நண்பர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஒருவன் தாழ்ந்த குலத்திலோ, உயர் குலத்திலோ பிறந்திருக்கலாம்.அவன் அறநெறிக்கு புறம்பானதைச் செய்யாதவனாகவும், நற்பண்புகளுக்கு மதிப்புக் கொடுப்பவனாகவும், மென்மையும்-கனிவும் உள்ளவனாகவும், தீயதைச் செய்யக் கூசுபவனாகவும் இருந்தாலவன் உயர்குலத்தைல் பிறந்த சிறப்புடைய நூறுபேர்களைவிட உயர்ந்தவனாகப் போற்றப்படுவான்

நெருங்கிப் பழகும் இருவர்,ஒரே மாதிரியான மனப்பான்மை, ரகசியங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுதல்,ஒரே மாதிரியாக உலகவிஷயங்களைப் புரிந்து கொள்லுதல் ஆகிய ஒற்றுமையான தன்மைகளைக் கொண்டிருந்தால் ,அவ்விருவரிடையே நிலவும் நட்பு ஒருபோதும் தேயாது.

ஒருவன் கொடிய மனம் கொண்டவனாகவும், சரியான படிப்போ-பயிற்சியோ பெறாதவனாகவும் இருந்தால் அவனுடன் அறிவாளி நட்பு கொள்வதைத் தவிர்ப்பான்.தண்ணீரை.மறைத்துப் பாசி படிந்துள்ள கிணற்றைப் போல மனம் விட்டுப் பேசாமால் மூடி மறைத்துப் பேசுகின்றவனையும் நண்பனாக்கிக் கொள்வதை அறிஞர்கள் தவிர்ப்பர்.ஏனெனில் அப்படிப்பட்ட நட்பு நீடிக்காது

கர்வம் நிறைந்தவர்கள்,அறிவிலிகள், கோபாவேசப்படுபவர்கள், அவசரப்படுபவர்கள், பண்புகள் அமையப் பெறாதவர்கள் ஆகியோருடன் நட்புக் கொள்வதை புத்திசாலி தவிர்த்துவிட வேண்டும்

நன்றியுடையவர்கள்,பண்பாளர்கள்,உண்மையானவர்கள்,உயர்தரமானவர்கள், விசுவாசிகள்,சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள், ஒழுக்கத்திலும்-நேர்மையிலும் உறுதியானவர்கள் ஆகியவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது விரும்பத்தக்கது.

புலன்களை அவை நாடும் இன்ப நுகர்ச்சிகளிலிருந்து பின் வாங்கச் செய்து கட்டுப்படுத்தினால் அவை சாவை வெல்வதற்கு சமமாகு.புலன் இன்பங்களில் அளவுக்கு மீறி ஆழ்ந்திருப்பது ஆபத்து.அவ்வாறு இன்பங்களில் மூழ்கி இருப்பவர்கள் தேவர்களாயினும் அழிவுறுவர்

பணிவு,எல்லா உள்ளங்களிடத்தும்.கனிவு, பொறாமையின்மை,பொறுமை, சகிப்துத் தன்மை,நண்பர்கலீடம் மரியாதையும் பழகுதல் ஆகியவை நம் ஆயுளை நீடிக்க வைக்கும் என அறிஞர்கள் கூற்கின்றனர்

(வள்ளுவன் _ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
             தான்சாம் துயரம் தரும்
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவிற்குத் துயரத்தை உண்டாக்கிவிடும்

 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
 வீடில்லை நட்பாள் பவர்க்கு

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்

No comments:

Post a Comment