Wednesday, January 6, 2016

40- வலிமைகளும்- நெருப்பின் ஆற்றலும்



மனிதர்களிடம் இருக்கும் வலிமைகள் ஐந்து வகைஆகும்.இந்த ஐந்தில் ஒன்று உடல் வலிமை ஆகும்.இது தரத்தில் கடைசி ஆகும்

இதற்கு மாறுபட்டது சிறந்த ஆலோசகர்களைப் பெற்றிருப்பது.ஆகும்.இந்த வலிமை மங்களமானது.இதற்கும் மேற்பட்டவலிமை நிரம்பச் செல்வம் பெற்றிருத்தல்.

உயர் குலத்தில் பிறந்திருத்தல் செல்வ வலிமையை விட மேம்பட்டதாகும்.பரம்பரையாக பாட்டனாரிடமிருந்து தந்தைக்கும்,தந்தையிடமிருந்து மகனுக்கும் இயற்கையாகவே மரபுப்பெருமை எனும் இந்த வலிமை  கிடைக்கிறது

அறிவு எனும் வல்லமை மற்றவற்றைவி ட அதிக வலுவானது.அறிவே முதல் வலிமை ஆகும்.அதுவே மற்ற நான்கு  வலிமைகளைப் பெற வழி வகுக்கிறது

பழி வாங்கக் கூடியவனிடம் விரோதம் கூடாது.ஒருவேளை அவன் நெடுந்தொலைவில் வசித்துக் கொண்டிருக்கலாம்.ஆகவே அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து விரோதம் வைத்துக் கொள்ளக் கூடாது

பெண்கள், அரசன்,பாம்பு, ஒருவன் பெற்றுள்ள ஏட்டறிவு, பணக்காரர்கள், எதிரிகள்,புலன் இன்பங்கள், ஒருவனது ஆயுள் ஆகியவை நம்பற்குரியவை அல்ல.எந்த அறிவாளியும் இவற்றை நம்பி இருக்க மாட்டான்

விவேகமுள்ளவன் எடுக்கும் நடவடிக்கை ஆகிய அம்பின் விளைவை மருத்துவர்களோ,மருந்துகளோ மாற்ற முடியாது.கடவுளுக்கு படையல் அளித்தல், புனிதச் சடங்குகள், அதர்வ வேதத்திலுள்ள தந்திர மந்திரங்களை பிரயோகித்தல், மூலிகை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டும் விவேகமுள்ளவனின் செயலின் விளைவை மாற்ற முடியாது.(அவனது செயல்கள் மிகச் சரியான மாற்ற வழி தேவையில்லாததாகும்)

பாம்பு, நெருப்பு, சிங்கம் ஆகியவற்றையும், நல்ல குடும்பத்தில் பிறந்தவனையும் யாரும் அலட்சியம் செய்யக்கூடாது.ஏனெனில் இவற்றின் ஆற்றல் அளவு கடந்ததாகும்

தீ, உலகில் அதிக அளவில் சக்தி பெற்றதாகும்.அது விறகுனுள் மறைந்துள்ளது.ஆனாலும் மற்றவர்கள் தூண்டிவிடாத வரையில் பிறருக்கு எநத்க் கெடுதலும் செய்வதில்லை

மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்கையில் அவற்றினுள் இருக்கும் வெப்ப ஆற்றல், தீயாகக் கிளம்பி மரங்களையே எரித்து விடுகிறது.அந்த நெருப்பு பரவி, காடு முழுவதும் சாம்பலாகி விடுகிறது.அப்போது காட்டிலுள்ள இதரப் பொருள்களும் ,உயிரினங்களும் கூட எரிந்து விடுகின்றன

அதுபோலவே உயர் பண்புகள் நிறைந்தவர்களும்,ஆற்றலாகிய பெரிய நெருப்பை மறைத்து வைத்துள்ளனர்.அந்த ஆற்றல் பொறுமை ஆகும்.அது வெளிப்படாது விறகினுள் நெருப்புப் போல உள்ளது

நீங்களும், உங்கள் புதல்வர்களும் மரத்தில் படரும் கொடி போன்றவர்கள்.மரத்தின் துணையின்றி, மரத்தைச் சாராமல் கொடி வளரமுடியாது.

உங்களது புதல்வர்கள் காடு போல.பாண்டவர்கள் சிங்கம் போல.சிங்கம் இல்லா காடு அழிக்கப்படும்.காட்டில் வாழும் சிங்கங்கள் அழியும்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

No comments:

Post a Comment