Friday, January 15, 2016

44-அறிஞர்களின் சொல்படி நடக்க வேண்டும்



அறிஞர்களின் நன்மொழிகளை நடைமுறையில் கொண்டுவருவதால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி நன்கு சிந்தனை செய்தபின்னர் செயலில் இறங்கி உழைக்கத் தொடங்கும் மனிதன் குன்றாப் புகழைப் பெறுவான்

கெட்டிக்காரர்கலூம் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.இதனால்...எதனை அறிந்து கொள்ள வேண்டுமோ..அதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.எது,ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்டதோ அதை பின்பற்றவும் முடியாமல் போகிறது

ஒரு அறிஞன் பாவச்செயல் என்று கருதப்படும் செயல்களைப் புரியாதிருந்தாலவன் வளம் பெற்று வாழ்வான்,ஒருவன் அறிஞனாக இருந்தும் அறிவு கோணலாகப் போய், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் முன்பு செய்த பாவக்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அவன் நரகத்தில் அமுக்கப் படுவான்.அதிலிருந்து அவனால் தப்ப இயலாது.

ரகசிய ஆலோசனைகளும்..பின் சொல்லப்பட்டுள்ள வழிகளில் ஒன்றின் மூலம் வெளிப்பட்டுவிடக் கூடும் என்பதை அறிவுள்ளவன் கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்வில், வெற்றியும், செல்வமும் அடையவும், தன் பரம்பரை வளர்ந்து தொடரவும் விரும்புகிறவன் அந்த ஆறு அபாயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

மதுவின் போதை,தூக்கத்தில் உளறுதல்,எதிரிகளை ஒற்றர்கள் கண்காணிப்பது பற்றி அறியாமை, மனதில் இருப்பது முகத்தில் பிரதிபலிப்பாகி விடுதல், கெட்டவர்களான அமைச்சர்களை நம்புதல்,தூதர்கள் திறமையற்றவராய் இருத்தல் என்று ஆறு வழிகளில் நமது ரகசியம் வெளிப்பட்டு விடும்

இந்த ஆறு வழிகளுக்கு வாய்ப்பளிக்காமல் அடைத்துவிட வேண்டும்.அவ்வாறு எச்சரிக்கையாக இருப்பதுடன், எவன் அறநெறியைக் கடைப்பிடித்தல், நேர்மையாக வாழ்க்கை வசதிகள் பெறுதல்,மிதமாக இன்பம் அனுபவித்தல் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுகின்றானோ அவன் தன் எதிரிகளை வென்று அடக்கி ஆளமுடியும்.

ஒருவன் பிரஹஸ்பதியைப் போல அறிவாளியாய் இருக்கலாம்.ஆயினும்,அவன் புனித நூல்களையும், சாஸ்திரங்களையும் பயிலாதவனாகவும், வயதானவர்களுக்கு சேவை செய்யாதவனாகவும் இருந்தால் அவன் நற்பண்புகளை பெறுவதற்கும் வாழ்க்கை வசதிகளை அடைவதற்கும் உரிய வழியை அறியாதவனாக இருப்பான்

கடலில் விழுந்த பொருள்...போனது போனதுதான்.நாம் சொல்வதை ஒருவன் கேட்காவிடின்..நம் சொற்கள் எல்லாம் வீணாகி விட்டன எனலாம்.சுயக்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் வேதநூல் அறிவைப் பெற்றிருப்பினும் வீண்தான்.நெருப்பில்லாத வேள்விக் குண்டத்தில் பூஜைப் பொருட்களைப் போடுவதால் எந்த ஆன்மீக நன்மையும் ஏற்படாது.

No comments:

Post a Comment