ஒரு முதியவர் அல்லது பெரியவர் ,ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால். அவன் உரிய மரியாதையைக் காட்ட வேண்டும்.இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும்.பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்கும்
ஒரு நல்லவர் நம் வீட்ட்ற்கு வந்தால்,அவரை வரவேற்று உட்கார ஆசனம் தர வேண்டும்.பிறகு தண்ணீர் கொண்டுவந்து அவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்.அடுத்து, அவர் நலன் விசாரித்த பின், நம் குடும்ப நலனைத் தெரிவிக்க வேண்டும்.அவர் வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும்
வேதங்களை நன்று பயின்றவர்க்கு தண்ணீரோ, தயிரும்-தேனும் கலந்த பானமோ, பசுவோ அளிப்பதன் மூலம் நன்மை பெறலாம் என பேராசைப் படுபவர்களிடமிருந்து வேதியர் எதையும் ஏற்க மாட்டார்.அவர்கள் சாபத்திற்கு பயந்து பொருட்கள் அளிப்பவர்களிடமிருந்தும் வேதியர் எதையும் ஏற்க மாட்டார். இவ்வாறு வேதியரைச் சரிகட்டும் குடும்பஸ்தினரின் வாழ்க்கை வீணாகிவிடும்
குறிப்பிட்ட சில வகையினரை நாம் விருந்தினர்களாக வரவேற்று உபசரிக்கக் கூடாது.அததகையோரில் அறுவை சிகிச்சை செய்பவர்,பிரம்மச்சரியத்தை நடுவில் கைவிட்ட சமயக் கல்வி மாணவர்,திருடன்,கொடூரன்,குடிகாரன்,கருச்சிதைவு செய்பவன்,ராணுவ வீர ஊழியர், வேத அறிவை விற்பனை பொருளாக்குபவர் ஆகியோர் அடங்குவர்.இவர்களில் யாராவது நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் விருந்தினர்களை உபசரிக்கக் கூடாது
சில பொருட்களை விற்பது உயர்ந்தத் தொழிலாகக் கருதப்படுவதில்லை.உயர்ரக வணிகராகக் கருதப்பட விரும்புபவன், அவற்றை விற்பதைத் தவிர்க்க வேண்டும்.உப்பு, சமைக்கப்பட்ட உணவு,தயிர், பால்,தேன், எண்ணெய், நெய்,எள்,இறைச்சி,பழங்கள்,கிழங்குகள்,கீரை, காய்கறி,சிவப்பு சாயமேற்றிய துணி,வசனை திரவியங்கள்,வெல்லப்பாகு ஆகியவற்றை விற்பனை செய்வது உயர் வணிகம் அல்ல
உண்மையான தூறவி கோபப்பட மாட்டார்.மண்ணையும்,தங்கத்தையும் சமமாகவே மதிப்பர்.எதற்கும் கவலைப்பட மாட்டார்கள், யார் மீதும் பற்று வைப்பதோ...யாரையும் வெறுப்பதோ கிடையாது.தன்னை யார் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிப்படைவதில்லை.பிரியமானவை-பிரியமற்றவை என்று வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை அவசியம் இருப்பதில்லை.அவர் எந்நிலையிலும் சலனப்படாது அமைதியாக இருப்பர்.
உண்மையான துறவி யாருக்கும் சொந்தமில்லாதவர்..காட்டில் விளையும் அரிசி, கிழங்குகள்,மரக்கொட்டைகள், இலைகள் ஆகியவற்றை உண்டு உயிர்வாழ்வார்.சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார்.அக்கினிக்கு பலியுணவைக் கொடுத்து வழிபடுவார்.தனியிடத்தில் வசிப்பார்.ஆனாலும் தன்னை சந்திப்பவர்களை நன்கு உபசரிப்பார்
தொலைவில் உள்ள நல்லறிஞர் ஒருவருக்குக் கெடுதல் செய்து விட்டு, அவர்தான் தொலைவில் இருக்கிறாரே....நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைக்க வேண்டாம்.அறிஞர்கள் கைகள் நீண்டவை,ஆகவே அவர்கள் தமக்குத் தீங்கிழைத்தவர்கள் எங்கிருந்தாலும் தண்டித்து விடமுடியும்,
நம்மத் தகாதவரிடம் நாம் நம்பிக்கை வைக்கக் கூடாது.ஒருவர் நம்பத்தக்கவர் ஆனாலும் ஆர் மீதும் அளவு கடந்து நம்பிக்கை வைக்கக் கூடாது.எத்ற்கும் மற்றவர்களையே நம்பினால் நாம் ஆதரவற்றோர் ஆகி பலகீனம் அடையவர் ஆவோம்
யாரிடமும் நாம் பொறாமை கொள்ளக் கூடாது.நமது மனைவிக்கு துன்பம் நேராமல் காப்பாற்ற வேண்டும்.நம்மைச் சார்ந்தவர்களுடனும், விருந்தினருடனும் உணவை,வசதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.இனிய சொற்களையே கூற வேண்டும்.குறிப்பாக பெண்களீடம் கனிவாகப் பேச வேண்டும்.ஆனால் அவர்களுக்கு மயங்கி அடிமை ஆகிவிடக் கூடாது.
சிறப்பான குணங்களுடன் நன்னடத்தையைக் கடைப்பிடித்து குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பெண்கள் பூஜிக்கத் தக்கவர்கள்.திருமகளே அவர்கள் வடிவத்தில் அவதாரம் எடுத்து அக்குடும்பத்தில் வாழ்வதாகக் கருதப்படும்.இத்தகைய தெய்வீகப் பெண்கள் சிறப்பாகப் பாதுகாக்கப் பட்டு...பராமரிக்கப்பட வேண்டியவர்கள்
ஒருவன் குடும்பத்தின் தலைமையை எடுத்துக் கொண்டு விட்டால், வீட்டின் உள் நீர்வாகத்தை தந்தையிடமும், சமையலறைப் பொறுப்பைத் தாயிடமும், தனக்கு நிகரானவரிடம் பசுக்களின் பராமரிப்பயும் ஒப்படைக்க வேண்டும்.விவசாய வேலைகளைத் தானே நேரில் கவனிக்க வேண்டும்.வீட்டிற்கு வரும் விருந்தினரை தனது புதல்வர்களைக் கொண்டு உபசரிக்க வேண்டும்
நீரிலிருந்து நெருப்புத் தோன்றியது.அந்தணர் குலத்திலிருந்து சத்திரியர்கள் தோன்றினர்.கல்லிலிருந்து உலோகங்கள் எடுக்கப் பட்டன.இவ்வாறு தோன்றிய தீயின் சக்தி,சத்திரியரின் வலிமை,உலோகங்களின் ஆற்றல் எங்கும் செல்லுபடி ஆகக் கூடியவை.ஆனால், இவை தாங்கள் உதித்த இடத்தைப் பார்ப்பதில்லை
உயர்குலத்தில் பிறந்த நல்லவர்கள் நெருப்பப் போலவே அளவற்ற சக்தி உடையவர்கள் ஆவர்.ஆனால், வடிவெடுக்காமல் விறகுக்குள் அமைதியாகக் கிடக்கும் தீயைப் போல உயர்குலச் சான்றோர்கள் தங்களது ஆற்றலை வீணாக வெளியிடாமல் பொறுமையாய் இருப்பார்கள்